வெள்ளி, 28 நவம்பர், 2014

Jaya Championed Tamil Cause More Than Modi: Vaiko 7 பேர் விடுதலைக்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- வைகோ பேச்சு

ம.தி.மு.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்றார். கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

இலங்கையில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியதன் மூலம் பிரதமர் பதவியை அவர் களங்கப்படுத்தி விட்டார்.

இதுவரையிலும் எந்த பிரதமரும், இலங்கை உள்பட எந்த நாட்டு தேர்தல் என்றாலும், வெற்றி பெறுவதற்கு வாழ்த்து கூறியது இல்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு ஆயுத உதவியோ, பண உதவியோ செய்ய மாட்டோம் என்று அறிவித்தார். வாஜ்பாய் வழியை நரேந்திரமோடி கடைபிடிக்க வேண்டும்.

4 மீனவர்கள் விடுதலையில் நரேந்திரமோடி அரசு நாடகம் ஆடியது. தமிழ் ஈழம் தொடர்பாக உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரகடனங்களை பினாங்கில் நிறைவேற்றினோம்.

இதே தீர்மானத்தை தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றிய முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய துணிச்சல் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதனால் வரலாறு உங்களுக்கு பொன் மகுடம் சூட்டும்.

அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இதே தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அதற்கு டெல்லி அரசு நமக்கு சாதகமாக இல்லை. மாறாக ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறும் நிலையில் தான் உள்ளது. நம் பக்கம் நியாயம் உள்ளது. பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தை தான் கேட்கிறோம்.

இந்தி திணிப்பை தமிழகத்தில் திணித்தால், தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு வைகோ பேசினார்.

கூட்டத்தில் டாக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, தமிழருவிமணியன், புகழேந்தி தங்கராஜ், கொளத்தூர் மணி, இயக்குனர் கவுதமன், இமயம் ஜெபராஜ், வக்கீல் தேவதாஸ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, குமரி விஜயகுமார், கவிஞர் தமிழ் மறவன், கவிஞர் கோமகன் கோட்டைசாமி, வடசென்னை மவாட்ட செயலாளர் சு.ஜீவன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி, திரு.வி.க. நகர் பகுதி இளைஞரணி செயலாளர் வீடியோ முருகன், வக்கீல் தங்கவேல், எம்.கே.மலையாளன், தாயகம் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tamil Maanila Congress தமிழ் மாநில காங்கிரஸ்


தமிழ் மாநில காங்கிரஸ்


முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். கட்சியின் கொடியை நேற்று முன்தினம் (26–ந்தேதி) ஜி.கே.வாசன் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார். அதில் காவி, வெள்ளை, பச்சை நிறத்துடன் காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெற்றிருந்தன.



இதையடுத்து மாநாட்டை அறிவிக்கும் வகையில் நேற்று சென்னையில் ராட்சத பலூனையும் பறக்க விட்டார்.

புதிய கட்சியின் பிரமாண்ட தொடக்க விழா திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் இன்று மாலை கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதற்காக அங்கு 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் 120 பேர் அமரும் வகையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

கோட்டை வடிவிலான மேடையின் வலதுபுறம் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் புனித ஜார்ஜ் கோட்டையும், இடதுபுறம் வலிமையான பாரதம் என்ற வாசகத்துடன் டெல்லி செங்கோட்டையின் மாதிரியும் வைக்கப்பட்டிருந்தது.

மாலை 5 மணிக்கு மேடையேறிய ஜி.கே.வாசன், புதிய கட்சி துவக்க விழாவிற்கு வந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக பேசத் தொடங்கினார். வளமான தமிழகத்தை உருவாக்க மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கியிருப்பதாக கூறினார். இதன்மூலம், மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயமாகி உள்ளது. புதிய கட்சியின் பெயரை வாசன் முறைப்படி அறிவித்த பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் உரையாற்றினர்.

Thinakkural epaper 28-NOV2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/

தினக்குரல்

Uthayan ePaper 28NOV2014 உதயன்

http://euthayan.com/indexresult.php?id=31619&thrus=0


உதயன்


http://euthayan.com/indexresult.php?id=31622&thrus=3

Maalaimalar ePaper 10-DEC-2014 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  10-DEC-2014


  

மேலே உள்ள 

 



மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Maalaimalar ePaper 28NOV2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-NOV-2014


  

மேலே உள்ள 

 



மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Tamil Nesan ePaper 28NOV2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts


தமிழ் நேசன்

வியாழன், 27 நவம்பர், 2014

பலத்த பாதுகாப்பிலும் யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி !

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள்  என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார்  மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில்

 பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=462563680627580197#sthash.Hc0ARWl9.dpuf
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள்  என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார்  மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 
 
இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில்.
 
பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=462563680627580197#sthash.Hc0ARWl9.dpuf

உரிமைக்காக உயிர் நீத்த தமிழர்களுக்கு " அஞ்சலிகள்"

http://euthayan.com/indexresult.php?id=31603&thrus=1


உரிமைக்காக உயிர் நீத்த தமிழர்களுக்கு " அஞ்சலிகள்"


மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் சிங்கள படை

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் படையினரின் ரோந்து நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவிலும் பகலிலும் பெரும் எண்ணிக்கையான படையினர் வீதிகளில் சைக் கிள்களிலும் கால்நடையாகவும் ரோந் துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வடக்கின் நகரப் பகுதிகளில் படை யினர் கால்நடையாகவும், சைக்கிள்க ளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் படையின ரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வீதிகளில் பயணிப்போரை வழிமறித்துச் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தின் இறுதி நிகழ்வு நாள் இன்று வியாழக்கிழமை மாலை ஈகை சுடரேற்றலுடன் இடம்பெறும்.

அதேவேளை,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிர பாகரனின் 60ஆவது பிறந்தநாள் நேற்றாகும்.

இதனை முன்னிட்டு முதல் மாவீரர் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆகி யோர் பிறந்த பிரதேசமான வடமராட் சிப் பகுதியிலுள்ள வீதிகளில் இரவு நேரங்களில் சைக்கிள்களில் ரோந்துப் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் கடந்த இரு தினங்களாக அளவுக்கு அதிகமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக வல்வெட்டித் துறை, ஊரிக்காடு, உடுப்பிட்டி, புறாப் பொறுக்கி ஆகிய பகுதிக ளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் படையினர் இரவு வேளை மற்றும் விடியற்காலைப் பொழு தில் வீதியால் பயணிப்போரை வழிமறித்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத் தும் நடவ டிக்கைகளிலும் ஈடுபட்டு வரு கின்றனர்.

குறிப்பாக அல்வாய், மாலுசந்தி, நெல்லியடி, வல்லை போன்ற பகுதி களில் இத்தகைய சோதனை நடவடிக் கைகள் இடம்பெற்றதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

படையினரின் இந்த நடவடிக் கைகளால் இரவு நேரங்களில் வீதிகளில் பயணம் செய்வது அச்சமாகவுள்ளதாக வும், இதனால் நேரத்துடன் வீடுக ளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட் டது.

Maalaimalar ePaper 27NOV2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  27-NOV-2014


  

மேலே உள்ள 

 



மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

---------------------------------------------------------

Uthayan ePaper 27NOV2014

http://euthayan.com/indexresult.php?id=31602&thrus=0

Tamil Nesan ePaper 27NOV2014 மலேசியா

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts
மலேசியா

புதன், 26 நவம்பர், 2014

Sudaroli ePaper 27-NOV-2014 சுடர் ஒளி

http://sudaroli.com/
சுடர் ஒளி

Maalaimalar ePaper 26NOV2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  26-NOV-2014


  

மேலே உள்ள 

 


மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

---------------------------------------------------------

பிரபாகரனின் பிறந்தநாள்; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்



தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60 ஆவது பிறந்த தினம் இனிப்புக்கள் வழங்கிக் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகை 26 ஆன இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள்.

இன்று அகவை 60 ஐ கண்ட தலைவர் பிறந்தநாளை தாயகப்பகுதியின் பல இடங்களில் உள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் என்றால் அவரின் வயதின் எண்ணிக்கைக்கு பானை வைத்து பொங்கல்  பொங்குவதும் , அவரின் வயதினை வைத்து குறித்த அளவு கிலோவுடைய கேக் வெட்டுவதும் என அனைவரும் மிகவும் சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=159043678426223002#sthash.yYAovuw6.dpuf
தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60 ஆவது பிறந்த தினம் இனிப்புக்கள் வழங்கிக் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகை 26 ஆன இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள்.

இன்று அகவை 60 ஐ கண்ட தலைவர் பிறந்தநாளை தாயகப்பகுதியின் பல இடங்களில் உள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் என்றால் அவரின் வயதின் எண்ணிக்கைக்கு பானை வைத்து பொங்கல்  பொங்குவதும் , அவரின் வயதினை வைத்து குறித்த அளவு கிலோவுடைய கேக் வெட்டுவதும் என அனைவரும் மிகவும் சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=159043678426223002#sthash.yYAovuw6.dpuf
தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60 ஆவது பிறந்த தினம் இனிப்புக்கள் வழங்கிக் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகை 26 ஆன இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள்.

இன்று அகவை 60 ஐ கண்ட தலைவர் பிறந்தநாளை தாயகப்பகுதியின் பல இடங்களில் உள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் என்றால் அவரின் வயதின் எண்ணிக்கைக்கு பானை வைத்து பொங்கல்  பொங்குவதும் , அவரின் வயதினை வைத்து குறித்த அளவு கிலோவுடைய கேக் வெட்டுவதும் என அனைவரும் மிகவும் சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=159043678426223002#sthash.yYAovuw6.dpuf
பிரபாகரனின் பிறந்தநாள்; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
news
தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60 ஆவது பிறந்த தினம் இனிப்புக்கள் வழங்கிக் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகை 26 ஆன இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள்.

இன்று அகவை 60 ஐ கண்ட தலைவர் பிறந்தநாளை தாயகப்பகுதியின் பல இடங்களில் உள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் என்றால் அவரின் வயதின் எண்ணிக்கைக்கு பானை வைத்து பொங்கல்  பொங்குவதும் , அவரின் வயதினை வைத்து குறித்த அளவு கிலோவுடைய கேக் வெட்டுவதும் என அனைவரும் மிகவும் சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=159043678426223002#sthash.yYAovuw6.dpuf

Uthayan 26NOV2014 உதயன் :

http://euthayan.com/indexresult.php?id=31582&thrus=2#

LTTE founder Prabhakaran's birthday

https://www.facebook.com/ilavam/photos/a.298682836903217.59129.290149147756586/597622420342589/?type=1&theater

செவ்வாய், 25 நவம்பர், 2014

Uthayan ePaper 25NOV2014 உதயன் தமிழர் பகுதி - தேர்தல் நிலையங்களின் விபரங்களை "சிங்கள இரணுவம்" சேகரிக்க ஆரம்பம்

http://euthayan.com/indexresult.php?id=31558&thrus=0

தமிழர் பகுதி - தேர்தல் நிலையங்களின் விபரங்களை "சிங்கள இரணுவம்" சேகரிக்க ஆரம்பம்

http://euthayan.com/indexresult.php?id=31560&thrus=2

Maalaimalar ePaper 25NOV1014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  25-NOV-2014


  

மேலே உள்ள 

 


மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

---------------------------------------------------

ஞாயிறு, 23 நவம்பர், 2014

வியாழன், 20 நவம்பர், 2014

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி : ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி, அதிபர் தேர்தலில் ஒருவர் 2 முறை மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், அதிபர் தேர்தலில் 3வது முறையாக தாம் போட்டியிடவதற்காக, புதிய சட்டத்திருத்தத்தை  கொண்டு வந்தார்.

இதற்கு, இலங்கை உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி, அதிபர் தேர்தலில் ஒருவர் 2 முறை மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், அதிபர் தேர்தலில் 3வது முறையாக தாம் போட்டியிடவதற்காக, புதிய சட்டத்திருத்தத்தை  கொண்டு வந்தார். இதற்கு, இலங்கை உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.ns7.tv/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87#sthash.GI9hvfcF.dpuf

Thinakkural ePaper 20NOV2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/
தினக்குரல்

Uthayan ePaper 20NOV2014

http://euthayan.com/indexresult.php?id=31461&thrus=2

Maalaimalar ePaper 20NOV1014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-NOV-2014



  

மேலே உள்ள 

 



மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

---------------------------------------------------

Sudaroli ePaper 20NOV2014 சுடர் ஒளி

தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை

 தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை



கொழும்பு, நவ.20-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேரும் கைது ஆனார்கள். கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.


இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். தமிழக மீனவர்கள் 5 பேரையும் மீட்கக் கோரி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தின.

 இதற்கிடையே, தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பு நகரில் உள்ள இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

5 பேரும் விடுதலை

ஆனால் இந்த அப்பீல் வழக்கு நடைபெறுவதை விரும்பாத அதிபர் ராஜபக்சே, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கி 5 மீனவர்களையும் விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்தார். பொதுமன்னிப்பு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதன்பேரில், இந்திய தூதரகத்தின் சார்பில் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதிபர் ராஜபக்சே நேற்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தார். இதற்கான அறிவிப்பை ராஜபக்சே வெளியிட்டு இருப்பதாக அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.

இதே போல் தமிழக மீனவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் 3 பேரும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஒப்படைப்பு

பின்னர் இந்த தகவல் கொழும்பு வெலிக்கடை சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரையும் சிறையில் இருந்து அவர்கள் விடுதலை செய்தனர். 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பிறகு 5 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்திய தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவில் அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.


இந்திய தூதர் சந்திப்பு

5 இந்திய மீனவர்களின் தண்டனையையும் ரத்து செய்து அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ததற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கூறினார். 5 மீனவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு இந்தியாவில் தண்டனை எதுவும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி

தூதரகத்தில் இருந்தபடி, மீனவர் லாங்லெட் தங்கச்சிமடத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் 5 பேரும் விடுதலையான தகவலை தெரிவித்தார்.

இதை அறிந்ததும் 5 பேரின் குடும்பத்தினரும், மீனவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.