வெள்ளி, 9 டிசம்பர், 2016

Federal Rights மாநிலங்களின் உரிமைக் குரல் !

மாநிலங்களின் உரிமைக் குரல்!

ஆழி செந்தில்நாதன்
+  
வரலாற்றில் ஒருவருக்கு என்ன இடம் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நவீன தமிழக வரலாற்றில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன இடம் கிடைக்கும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? நமது அரசியல் விமர்சன உலகம் அவரைப் பற்றி எதிர்மறையாகவே அதிகம் பேசியிருக்கிறது. ஆனால், அவரது மிக முக்கியமான சில பங்களிப்புகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும். இது அவருக்கான அஞ்சலி செலுத்தும் நேரம் என்பதால் மட்டும் அல்ல, அவரது மறைவுக்குப் பின்பு ஏற்பட வாய்ப்புள்ள ஓர் அபாயம் குறித்த கவலையாலும் இதைப் பற்றி இந்த நேரத்தில் நாம் பேச வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதாவைப் பற்றிய தன் இரங்கல் உரையில், திமுக எம்பி-யான கனிமொழி பேசியபோது, ஜெயலலிதா தமிழகத்தின் நலன்களை விட்டுக்கொடுக்காதவர் என்று கூறினார். அதைக் கேட்கும்போது சற்று ஆச்சரியமாக இருந்தது. மாநில உரிமை என்று கூறினாலே, அதைத் திமுகவுடன் இணைத்துப் புரிந்துகொள்வது என்பதுதான் காலம் காலமாக இருக்கும் ஒரு வழக்கம். ஜெயலலிதாவின் பிம்பத்தோடு மாநில சுயாட்சி என்கிற கருத்தாக்கம் அவ்வளவாகப் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அது மட்டுமின்றி, இக்கால அரசியல்வாதிகள் பலருக்கும் தேவைப்படாத பிம்பம் அது.

மாநில உரிமைகளின் பாதுகாவலர்

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இந்தியா முழுமையிலும் என்னவெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்று பாருங்கள். வழக்கமான அஞ்சலிக் குறிப்புகளுக்கு அப்பால், ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி, பெண்ணினத்தின் நாயகி என்பது போன்ற வர்ணனைகளுக்கு அப்பால், அரசியல் கிசுகிசுக்களுக்கு அப்பால் என்ன பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவரது பங்களிப்பாக எதைப் பேசுகிறார்கள் என்று பாருங்கள். ஒரு சிறு வட்டத்தில்தான் என்றாலும், ஜெயலலிதாவின் மாநில உரிமைகள் குறித்த பங்களிப்பு குறித்து ஒரு விவாதச் சரடு ஓடிக்கொண்டிருப்பதை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க முடியும்.

சமீப காலத்தில், நரேந்திர மோடி அரசுடன் மத்திய - மாநில உரிமைகள் விஷயத்தில் (குறிப்பாக, ஜிஎஸ்டி, 'நீட்', இந்தித் திணிப்பு உள்ளிட்டவை) ஜெயலலிதா எழுப்பிய எதிர்க்குரலைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளுக்கான கூட்டுக்குரலாக அவர் இருக்கிறார் என்று தமிழ்நாட்டில் சிலர் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால், வங்கம், பஞ்சாப், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாநில உரிமை நலன்களில் நாட்டம் கொண்டவர்கள் சமூக ஊடகங்களில் அது தொடர்பாக பதிவுசெய்துவந்ததை நான் பார்த்துவருகிறேன். அதன் தொடர்ச்சியாக இரு நாட்களாக அத்தகைய பதிவர்களின் அஞ்சலிக் குறிப்புகளையும் பார்த்தேன். அவர்கள் ஜெயலலிதாவை மாநில உரிமைகளின் பாதுகாவலர்களில் ஒருவராகவே மதிக்கிறார்கள்.

காலம் கற்றுத்தந்த பாடம்

ஜெயலலிதாவுக்கு இந்த வரலாற்றுப் பாத்திரம் எப்படிக் கிடைத்தது? 2011-க்குப் பிந்தைய ஜெயலலிதாவின் அணுகுமுறைகள், அவரது முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், பல வித்தியாசங்களைக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று, மாநில உரிமைகள் தொடர்பாக மத்திய அரசுகளோடு அவர் முரண்பட்டது. இத்தனைக்கும் தன் மீதான வழக்குகள் உட்படப் பல காரணங்களுக்காக டெல்லி விவகாரங்களில் கவனம் காட்ட வேண்டிய நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார். அவரது நெருங்கிய நண்பரும் சித்தாந்தரீதியிலும் அரசியல் பாணியிலும் இணக்கம் கொண்டவருமான மோடி அரசோடு அவர் இப்படியான பிணக்குகளை மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை. மேற்கொள்ள வேண்டும் என்று இங்கே யாரும் நிர்ப்பந்தம் செலுத்தவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. ஆனால், அவர் ஏன் அப்படி எதிர்வினை ஆற்றினார்?
காலம் கற்றுத்தந்த பாடமாக இருக்கலாம். 2009 ஈழ இனப் படுகொலைக்குப் பின் ஈழம் தொடர்பான விவகாரங்களில் ஜெயலலிதா முற்றிலும் வழக்கத்துக்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்து ஆச்சரியப்படுத்தினார். அதில் நிச்சயமாக சந்தர்ப்பவாதம் இருந்தது என்பதை மறுக்க இயலாது. "போர் நடக்கும்போது மக்கள் சாகத்தானே செய்வார்கள்?" என்று கூறியவர்தான் அவர். ராஜீவ் கொலையுண்டதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் முதல்வரான ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாடு அறியும். தமிழ் என்று சொன்னாலே
'தடா' என்கிற ஆட்சிக்காலம் அது. மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அடித்தளத்தை நொறுக்கித்தள்ளியவர் அவர்தான்.

ஒரே ஈழ ஆதரவு நாடு

ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டமன்றத்தில் ஈழச் சிக்கல் தொடர்பாக அவர் நிறைவேற்றிய தீர்மானங்களும் மூவர் விடுதலை தொடர்பாக (குளறுபடிகளுடன் இருந்தாலும்) அவர் எடுத்த நடவடிக்கைகளும் ஒரு மாறுபட்ட ஜெயலலிதாவைக் காட்டியது. ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை என்று குற்றஞ்சாட்டியதிலும் அதற்குப் பன்னாட்டு சுயாதீன விசாரணை வேண்டும் என்று கோரியதிலும் 2013-ல் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று எதிர்த்ததிலும் உலகத் தமிழர்களின் குரலைத்தான் அவர் எதிரொலித்தார். அந்தத் துயரமான நேரத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக தமிழ்நாடு அரசு விளங்கியது.

கோத்தபய ராஜபக்சக்களும் சிங்கள கார்ட்டூனிஸ்ட்டுகளும் பதறும் அளவுக்கு அவரது ஈழ ஆதரவு ஒரு உயர்ந்த கட்டத்தை எட்டியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதாவின் பிம்பம் உயர்ந்தது. இதை நாம் வெறுமனே 'திமுகவைக் காலி செய்யும் உத்தி' என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அது அப்படித்தான் என்றாலும்கூட, சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் பிரதிநிதியாக, தமிழ்நாட்டின் முதல்வராக அவர் வரலாறு தனக்களித்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்ல முடியும். செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறியவர்களுக்கு மத்தியில், தன் எல்லைக்குட்பட்ட அளவிலேனும், தைரியமாகச் செய்ய முன்வந்த ஒருவரை நாம் எப்படிக் குறைத்து மதிப்பிடுவது? இந்த விவகாரங்களில் அவர் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகவே வெளிப்படையாக நின்றார் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

ஜெயலலிதாவைப் பின்பற்றுங்கள்

அரசியல் தலைவர்கள், அரசியல் பலாபலன்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதில்லை. ஆனால், ஒவ்வொருவருக்கும் சில களங்களில் தொடர்ச்சியான ஈடுபாடும் இருக்கிறது. ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல. 2014 ஜூன் மாதம் இந்தி மொழி திணிப்பு விவகாரத்தில், அப்போது புதிதாகப் பதவியேற்றிருந்த அவரது நண்பர் நரேந்திர மோடியின் அசுர பலமிக்க அரசோடு ஜெயலலிதா மோதினார். முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசின் அதிகாரபூர்வக் கணக்குகளில் இந்தியைத்தான் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் (ஆங்கிலத்தில் பயன்படுத்துவது கட்டாயமல்ல) என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இரு உத்தரவுகளைக் கடுமையாக விமர்சித்துக் கடிதம் எழுதினார். இந்தியை ஆட்சிமொழியாக ஏற்காத மாநிலங்களுடனான தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற ஆட்சிமொழிச் சட்டத்தின் திருத்த விதியைச் சுட்டிக்காட்டினார். அதன் பிறகு, தொடர்ந்து மோடி அரசு இந்தித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டபோது, தனது விரிவான அறிக்கைகள் அல்லது கடிதங்கள் மூலம் ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். இந்த எதிர்வினைகளை மொழியுரிமை தொடர்பான அமைப்புகள் உன்னிப்பாகக் கவனித்துவந்திருக்கின்றன. ஜெயலலிதாவைப் பின்பற்றுமாறு தத்தம் மாநில முதல்வர்களை வற்புறுத்தின.

அவரது வாழ்வின் இறுதித் தருணம் வரை அவர் மத்திய - மாநில உறவுகள் குறித்த விஷயத்தில் ஒரு தொடர்ச்சியைப் பார்க்க முடிந்தது. அவர் விட்டுக்கொடுக்கிற விஷயங்கள் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சார்ந்து அமைகின்றன. ஆனால், அவர் விட்டுக்கொடுக்காத விஷயங்களில் தமிழ்நாட்டின் நெடுங்காலக் கோரிக்கைகள் அடங்கியிருக்கின்றன. 69% இடஒதுக்கீடு எந்த அளவுக்கு சமூகநீதிச் சிக்கலோ அதே அளவுக்கு மாநில உரிமைச் சிக்கலும்கூட. அதில் அவர் உறுதியாக இருந்தார். காவிரி, முல்லைப்பெரியாறு என எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் பொதுக்குரலை அவர் ஒலித்தார்.

எதிர்த்தவர்கள் பணிந்தார்கள்
சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான ஜிஎஸ்டி விவகாரத்தில், ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் மோடியின் பக்கம் நின்றன. முதலில் எதிர்த்தவர்களும் பிறகு பணிந்தார்கள். மாநில சுயாட்சிக்கென்றே கொடிபிடித்தவர்களான திமுகவினர்கூட, நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக உறுதியான முடிவெடுக்க இயலாத நிலையில் இருந்தது. உண்மையில், நாடாளுமன்றத்தில் அது தனிமைப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா தொடர்ச்சியாக ஜிஎஸ்டியை எதிர்த்துப் பேசினார். ஜிஎஸ்டிக்கான புதிய அமைப்பு என்பது மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை மீறுகிறது என்றும், அது மாநிலங்களின் வரி இறையாண்மையை நிர்மூலமாக்கும் செயல் என்றும் தமிழக அரசு காட்டமாக வாதிட்டது. இறுதியாக, கடந்த சுதந்திர தின விழாவில் ஜெயலலிதா இவ்வாறு கூறினார்: "நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை நாம் இன்றைய தினம் நினைவுகூர்கிறோம். சுதந்திரம் என்றால் பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமை மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரம்தான்."

இவை சாதாரணமான வாக்கியங்களா? வரி இறையாண்மை என்பதும் பொருளாதாரச் சுதந்திரம் என்பதும் ஆபத்தான வாதங்கள்தான். மத்திய அரசுக்கு அவர் எழுதும் கடிதங்களிலும் சட்டபூர்வமாக முன்வைக்கும் ஆவணங்களிலும் தீர்க்கமான முன்வைப்புகள் இருப்பதை நாம் பார்க்க முடியும். மாநில உரிமைகள் தொடர்பான ஜெயலலிதாவின் ஈடுபாடு ஆத்மார்த்தமானதோ இல்லையோ, தொடர்ச்சியானது என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். எல்லா முதல்வரையும்போல அவரும் டெல்லிக்குக் கட்டுப்பட்டவர்தான். ஆனால், அவரை எல்லாச் சமயங்களிலும் டெல்லியைக் கண்டு பயந்து நடுங்கியவர் என்று சொல்ல முடியாது. எந்தப் பிரதமரையும் ஆளுநரையும் அவர் தள்ளித்தான் வைத்திருந்தார். அவரது எதிர்ப்பைவிட அவரது ஆதரவைக் கண்டுதான் டெல்லிக்காரர்கள் அதிகம் பயந்தார்கள்! அவருக்கு டெல்லியின் அரசியலும் உள்நோக்கமும் நன்றாகத் தெரிந்திருந்தது.

செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா?

உதாரணமாக இந்த உரையைப் பாருங்கள். "ஐயா, நாம் இந்திய ஒருங்கிணைந்த நிதியம் பற்றிப் பேசுகிறோம். ஆனால், இந்த நிதியம் முதலில் எப்படி உருவாகியது? இதற்கான நிதி எப்படி சேகரிக்கப்படுகிறது? இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தின் உறுப்பினர்களாக உள்ள எல்லா மாநிலங்களும் பல்வேறு வழிகளில் பங்களித்து உருவாக்கப்பட்ட வருவாய்தானே இது? மத்திய அரசு என்கிற பலிபீடத்தின் முன்பு படையல்களைப் போல எண்ணற்ற வரிகளின் ஊடாக மாநிலங்கள் தொடர்ச்சியாக பெருந்தொகைகளை அளித்துவருகின்றன. இந்திய ஒருங்கிணைந்த நிதியத்துக்கு வருவாயைத் தொடர்ச்சியாக அளிப்பவை மாநிலங்கள்தானே?" என்று ஜெயலலிதா டெல்லியை நோக்கிக் கேட்டது நேற்று இன்று அல்ல. ஏப்ரல் 25, 1984-ல், மாநிலங்களவையில் செலவினங்கள் மசோதாவின் மீதான அந்த விவாதத்தில் அவர் கூறிய மற்றுமொரு கருத்து இன்றளவும் உண்மையானது: "வட மாநிலங்களின் பல மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை என்றால், அதற்கு முழுக் காரணம் அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளின் ஒட்டுமொத்த கையாலாகாத்தனமும் அக்கறை யற்ற போக்கும்தான். வட இந்திய மாநில அரசுகளின் ஒட்டுமொத்த கையாலா காத்தனத்துக்கும் மிக மோசமான நிர்வாகச் சீர்குலைவுக்கும் தமிழ்நாடு ஏன் தண்டம் கட்டி அழ வேண்டும்? உண்மையில், தாங்கள் செய்யாத குற்றத்துக்காக நான்கு தென் மாநிலங்களும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?''

ஜெயலலிதா மாநிலங்களவை உறுப் பினராக இருந்தபோது, மாநில உரிமைகள் தொடர்பாகப் பல முக்கிய விவாதங்களில் கலந்துகொண்டு அற்புதமாகப் பேசியிருக்கிறார். 1984 மே 5-ல் கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக வளர்ச்சி அமைச்சகத் திட்டம் குறித்த விவாதத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை மேற்கோள் காட்டி, தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என்று பேசிய பேச்சு குறித்து நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.

கொல்லைப்புறக் கொள்ளை

அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் கட்டாயமாக இந்தியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதை அவர் அந்தப் பேச்சில் விமர்சித்தார். ஆம், நண்பர்களே, ஜெயலலிதா இவற்றையெல்லாம் பேசியிருக்கிறார். ஒரு நடிகைக்கு, ஒரு பெண்ணுக்கு, வெறுமனே எம்ஜிஆரின் தோழிக்கு, எப்படி அரசியல் தெரியும் என்கிற ஒரு பொதுப்புத்திக்கு இது புரியாமல் போகலாம். ஆனால், இப்படிப்பட்ட விவாதங்களிலும் கடிதங்களிலும் ஆவணங்களிலும்தான் வரலாறு ஒருவரைப் பதிந்துகொள்கிறது.
இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். பாஜக கொல்லைப்புறமாக வந்து அதிமுகவைக் கவர்ந்துசெல்ல நினைக்கிறது அல்லது அதன் அடித்தளத்தை நொறுக்க நினைக்கிறது. முதல்வர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் என்ன நடந்தது? மருத்துவத் தேர்வுகளுக்குப் பொது நுழைவுத்தேர்வான 'நீட்'-ல் தமிழ்நாட்டைச் சேர்க்காதீர்கள் என்றார் ஜெயலலிதா. 'நீட்' சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்பது அவரது கருத்து. அவர் நினைவின்றி இருந்த நேரத்தில், மத்திய அரசு அதிமுகவை நெருக்கி சம்மதம் பெற்றுவிட்டது. பொம்மைகளை ஆட்டுவிக்கும் கயிறுகள் இடம் மாறிக்கொண்டிருக்கின்றன. அவர்களைப் பொம்மைகளாக நடத்திய ஜெயலலிதாவின் எல்லையும் இதுதான்.

நாம் மேற்கொள்ள விரும்புகிற மாநில உரிமைகளுக்கான போராட்டத்தின் முன்மாதிரியாக ஜெயலலிதா திகழ்கிறார் என்று ஒருபோதும் கூற முடியாது. இத்தகைய ஆட்சிகளோ கட்சிகளோ டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு உண்மையான சவால் என்றும் கூற முடியாது. ஆனால், டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு பார்வையை வீசியதிலும் "நீ மகாராஜா என்றால், நான் மகாராணி" என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும் பல மாநில முதல்வர்களிடையே மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட - அவர் வித்தியாசப்பட்டுதான் இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதனால், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்யும். அதனால், அந்தப் போராட்டத்தைத் தொடர்வதே அவருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்!

- ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர், தொடர்புக்கு: zsenthil  at   gmail.com
Thanks

Keywords: 
#ஜெயலலிதா, #Jayalalitha #FederalRights



செவ்வாய், 6 டிசம்பர், 2016

TN CM JJ தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா




# ஜெயலலிதா
#JAYALALITHA
#RIP

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

திடீர் மாரடைப்பு
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது.

உயிரை காப்பாற்ற முயற்சி
இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாலை 4.40 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் டாக் டர்கள் குழுவினர் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மாலை 5.30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஜெயலலிதா மரணம்
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இரவு 11-30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் சில அறிவுறுத்தல்கள் உள்ளன.

இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், மாநில முதல்-அமைச்சர் இறந்தது உறுதியானவுடன், அந்த மாநில கவர்னரும் அதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உறுதி செய்து கொண்ட பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு நள்ளிரவு அல்லது அதிகாலை கவர்னர் அல்லது தலைமைச் செயலாளர் முறையாக, முதல்-அமைச்சர் இறந்த தகவலை மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பார்.

இந்த வழிமுறையின்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தி நள்ளிரவு 12-15 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு 11-30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதே சமயம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் ஜெயலலிதா காலமானார் என்ற அறிவிப்பு வெளியானது.

தொண்டர்கள் கதறல்
அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். துக்கத்தை தாங்க முடியாமல் அவர்கள் முகத்திலும், தலையிலும் அடித்துக்கொண்டு ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதார்கள். சில பெண்கள் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்த தகவல் வெளியானதும் சென்னை நகரில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீரும், கம்பலையுமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியை நோக்கி கதறி அழுதபடி சாரை, சாரையாக வந்தனர். போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நோக்கியும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.

காட்டுத்தீ போல் பரவியது
ஜெயலலிதா இறந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், பெரும் சோகமும் அடைந்தனர். பலர் துக்கம் தாங்க முடியாமல் கதறி துடித்தனர். ஜெயலலிதாவின் புகைப்படங்களை தெருக்களில் ஆங்காங்கே அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்த தொடங்கினார்கள்.

Thinakkural ePaper 06-DEC-2016 தினக்குரல்


Tamilnadu CM Jayalalitha தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா (68) காலமானார்

தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா (68) காலமானார்


உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று 5/12/2016  இரவு 11.30 மணி அளவில் காலமானார்.



#ஜெயலலிதா
#Jayalalitha

வியாழன், 1 டிசம்பர், 2016

Maalaimalar ePaper 01-DEC-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-DEC-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

செவ்வாய், 8 நவம்பர், 2016

500 1000 Rupees 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு


08-NOV-2016 இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.






கருப்பு பணம், ஊழல் ஒழிக்கப்படும் என்ற கோஷத்துடன் 2014-ம் தேர்தலை சந்தித்து, வெற்றிப்பெற்று பிரதமர் ஆன நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி தன்னுடைய உரையில் இன்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்தார்.  

மத்தியில ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பலனாக, ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளியே வந்தது. பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில் ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதுபோல், கருப்பு பணத்துக்கு எதிராகவும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும்’ என்றார். அதன்படி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு யார் நிதி உதவி செய்வது? எல்லை தாண்டி, நமது எதிரிகள் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இது பலதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களை அடையாளம் கண்டறியும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கருப்பு பணத்துக்கு எதிராக புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என்றார். 


பிரதமர் மோடி பேசுகையில், மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உடனடியாக நாங்கள் போராடியது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராகவே. தேசத்தில் பண சுழற்சி செயல்முறையானது நேரடியாக ஊழலுடன் தொடர்பு உடையதாக உள்ளது, இது நம்முடைய சமூகத்தில் கீழ்மட்ட மக்களை பாதிக்கிறது. இன்று இரவு 12 மணிக்கு மேல் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும். இந்நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க 50 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரையில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். 

வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கலாம்.  

நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் மருத்துவமனைகளில் இந்நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக் கொள்ளப்படும். விமானம், ரெயில் டிக்கெட்கள் மற்றும் மருந்தகங்களில் நோட்டுகள் அதுவரையில் பெறப்படும். நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நாட்டில் வங்கிகளில் ஏ.டி.எம். செயல்படாது. நவம்பர் 9-ம் தேதி நாளை அனைத்து வங்கிகளும் மூடப்படும். பொதுமக்கள் சேவைக்காக அந்த ஒருநாள் மட்டும் செயல்படாது. பண பரிவர்த்தனையில் பிற முறைகளான, ’செக்’, டி.டி., கிரிடிட், டெபிட் கார்டுகள் முறையில் எந்தஒரு மாற்றமும் கிடையாது. 

விரைவில் புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும். அதிக மதிப்புடைய நோட்டுகளை, குறிப்பிட்ட அளவில் வெளியிட ஆர்.பி.ஐ. முடிவு செய்து உள்ளது. 

ஊழலை ஒழிப்பதற்கான பணியை தொடர்ந்து செய்வோம், ஊழல் மற்றும் கருப்பு பணம் விவகாரத்தில் தொடங்கப்பட்ட முயற்சியை வெற்றிகரமாக முடிக்க இணைந்து பணியாற்றுவோம். ஊழலுக்கு எதிராக போராட நாங்கள் விரும்புகின்றோம். அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி பேசினார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் வெளியீடு

நாளை மறுநாள் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவித்துஉள்ளார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது. 

பிரதமர் மோடியை அடுத்து ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் படேல் பேசினார். அவர் பேசுகையில், போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பெருகி வரும் விவகாரத்தினான் ஆபத்து பற்றி கவலையை எழுப்பினார், இதுபோன்ற ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிப்பை அதிகரித்து உள்ளோம், எவ்வளவு விரைவில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றார். நாளை மறுநாள் புதுபாதுகாப்பு அம்சங்களுடன் 500 நோட்டுகள் வெளிவரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாதபடி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நோட்டுக்கள் உள்ளன. போதிய எண்ணிக்கையில் நோட்டுக்கள் தயாராக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றன. கள்ள நோட்டு கருப்பு நோட்டு பணம் அதிகரித்துள்ளதை தடுக்க இந்த நடவடிக்கையானது அவசியம். புதிய நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே வங்கிகளுக்கு நாளை விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் புதிய அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை கொண்டு உள்ளது. புதிய ரூபாய் நோட்டின் மாதிரி வெளியிடப்பட்டு உள்ளது. நாங்கள் நவம்பர் 24-ம் தேதி நிலையை ஆய்வு செய்து வருகிறோம், புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆர்.பி.ஐ. அறிவித்து உள்ளது.

செவ்வாய், 1 நவம்பர், 2016

Maalaimalar ePaper 01-NOV-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-NOV-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

சனி, 1 அக்டோபர், 2016

Maalaimalar ePaper 01-OCT-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-OCT-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

2016 எழுக தமிழ்



இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது பேரெழுச்சி கொண்ட “எழுக தமிழ்” வரலாறாகியது
2016-09-25 10:26:37
தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசுக் கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று யாழில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அணிவகுப்பில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப் பட்ட இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரணியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னின்று ஆரம்பித்து வைத்திருந்ததுடன், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறுபட்ட தரப்பினரும் தமது பேராதரவை வழங்கியுள்ளனர்.   

தமிழ் மக்கள் பேர வையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் ஆதரவுடன் \'எழுக தமிழ்” மக்கள் எழுச்சி பேரணி வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பேராதரவுடன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. 

இப் பேரணியை யாழ் நல்லூர் கந்த சுவாமி ஆலய முற்றத்தில் இருந்தும் யாழ் பல்கலைக்கழக பர மேஸ்வரன் ஆலய வளாகத்தில் இருந்தும் இரு அணிகளாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். 

நல்லூரில் இருந்து ஆரம்பித்த பேரணியில் மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் யாழ் பல்கலையில் ஆரம் பிக்கப்பட்ட பேரணியில் மத குருமார்கள், பல்கலை கழக பேராசிரியர்கள், மாணவர்கள் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பெரும் பேரணியாக சென்றனர்.

பேரணியின் இரு அணியினரும் கந்தர்மடச்சந்தியில் சந்தித்து ஒன்றாக தமது உரிமைக் கோசங்களை எழுப் பியவாறு யாழ் முற்றவெளியை நோக்கி நடை பவனியாகச் சென்றார்கள். முற்பகல் 11.00 மணியளவில் யாழ் முற்ற வெளியை சென்றடைந்த பேரணியுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் தொகை அலை கடலாக காட்சியளித்தது. 

அதனை தொடர்ந்து “எழுக தமிழ்” மக் கள் எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் ஆரம்பத்தில்  போரினால் பாதிக்கப்பட்டு தனது அவயவங்களை இழந்த பொதுமகன் ஒருவர் எழுக சுடரை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி நடைபெற்று தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. 

நிகழ்வின் முக் கிய அம்சமாக “எழுக தமிழ்” பிரகடனத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் வெளியிட்டு வைத் தார்.

அதனை தொடர் ந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த விசேட உரையினை நிகழ்த்தியிருந்தார்.  தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

மக்கள் பிரதிநிதிகளின் உணர்ச்சிபூர்வமான உரைகளுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர்.இறுதியில் அனைத்து மக்களினதும் ஒருமித்த உணர்ச்சிபூர்வமான எழுக தமிழ் கோசத்துடன் பேரணி நிகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை அத்தியாவசிய சேவைகள் கருதி இயங்கிய மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள் தவிர்ந்த ஏனைய வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் எழுக தமிழ் பேரணிக்கு பூரண ஆதரவைத் தெரிவித்து கதவடைப்பை மேற்கொண்டிருந்ததுடன், பல நூறு பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து பேரணிக்கு ஒருமித்த பேராதரவை வழங்கியிருந்தமை தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இலட்சியப் பாதைக்கான ஒற்றுமையான பயணத்தினை வெளி உலகத்திற்கு உறுதியாக வெளிப்படுத் தியுள்ளது.

பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் தமது எழுச்சி முழக்கத்தில் இராணுவமே வெளியேறு, பெளத்த மயமாக்கலை உடனே நிறுத்து, காணி சுவீகரிப்பு இனியும் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய், காணாமல்போன எம் உறவுகளுக்கு என்னவாயிற்று என பதில் சொல், நல்லாட்சி அரசாங்கமே நீயும் ஏமாற்றுகிறாயா, சுயாட்சியை வழங்கு, மீனவர்களின் கடல் வளத்தை சுரண்டாதே, சொந்த இடங்களில் எம்மை மீள்குடியமர்த்து,  உள்ளக விசாரணைகள் தேவையில்லை, சர்வதேச விசாரணையே தேவை என பல்வேறுபட்ட உரிமை கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்காக பேரணி ஏற்பாட்டுக் குழுவினரால் போக்குவரத்து ஒழுங்குகள், குடிநீர் வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையிலும் பேரணி எழுச்சிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பெருமளவான பொலிஸார் வீதிக்கடமைகளில் ஈடுபட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.         (செ-4-9)




THANKS   :  வலம்புரி / Valampuri

Valampuri ePaper வலம்புரி 25-SEP-2016

2016 Ezhuka Thamizh (Let Tamil rise up) எழுக தமிழ் 2016




அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வுகாணப்பட வேண்டும் என எழுக தமிழ் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.
யாழ், முற்றவெளியில் “எழுக தமிழ்” பேரணியின் கூட்டத்தின் போது வைத்திய நிபுணரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தருவருமான பி. லக்ஸ்மன் 'எழுக தமிழ்' பிரகடனத்தினை மக்கள் மத்தியில் முன்மொழிந்தார்.



( thanks Tamilnet )
குறித்த பிரகடனத்தில், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும்.
சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியை சிங்கள தேசத்திற்கும், இலங்கை தீவின் மீதுகரிசனை கொண்டிருக்கும் சர்வதேசசக்திகளுக்கும் வலியுறுத்துவதே 'எழுக தமிழ் 2016' எழுச்சிப் பேரணியின் நோக்கமாகும்.


Members Speech at Eluga Tamil
“எழுக தமிழ்” 2016 எழுச்சிப் பேரணி பிரகடனம் பின்வருமாறு,
வட, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வலிந்து பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களும்,பௌத்தவிகாரைகளும், புத்தர் சிலைகளும் இந்த ஆட்சியிலும் அரசின் அனுசரணையுடன், இராணுவத்தின் உதவியோடு உருவாக்கப்பட்டுவருகின்றன.
தமிழர்களுடைய இன அடையாளத்தை அழிக்கவும், வட, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் குடிப்பரம்பலை வலிந்து மாற்றவும் அரசு எடுத்துவரும் இவ்வாறான சகல நடவடிக்கைகளையும் உடன் நிறுத்துமாறு இம் மக்கள் பேரணிவலியுறுத்துகின்றது.
யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகிய நிலையிலும் இராணுவம் மிக செறிவாக வட, கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவம் தமிழர் தாயகபிரதேசங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணியை சுவீகரிப்பு செய்தது மாத்திரம் அல்லாமல்,தொடர்ந்தும், தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.
உல்லாசவிடுதிகள்,விவசாயபண்ணைகள், இதர வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன், வடகிழக்கு நிர்வாகத்திலும் தொடர்ந்தும் தலையிட்டுவருகின்றது.
வட,கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர் தமது வாழ் வாதாரத்திற்காக தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு இராணுவத்தில் தங்கி தமது பொருளாதாரத்தைதாமே பொறுப்பேற்க முடியாத நிலையையும், இராணுவமயமாக்கலின் ஊடாக தமிழ் சமூகத்தினை பிளவுபடுத்தி, உறவுமுறைகளை சிதைத்து, தமிழர் கூட்டாக ஜனநாயக ரீதியில் அணி திரள்வதற்கு இடையூறாகவும் இராணுவம் நிலவிவருகிறது.


பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான இராணுவத்தினரின் பாலியல் வன்முறை சம்பவங்களும் தமிழ் தேசத்தின் இருப்பை சிதைக்கும் வழி வகைகளே. இதனால் வட,கிழக்கு தாயகத்திலிருந்து உடனடியாக இராணுவத்தை வெளியேற்றுமாறு இப்பேரணி வலியுறுத்துகின்றது.
தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக உள்ளகப் பொறிமுறையை நீதிக்கான தேடலில் பிரோயோசனமற்ற ஒன்று என தொடர்ந்த தேர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் செப்டம்பர் 2015 அறிக்கைமிகத் தெளிவாக இலங்கையின் நீதித்துறை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கதகமையற்றது எனக் கூறியது.
இருப்பினும் ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் இணைந்துகலப்பு பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு பொருத்தமானது என தமது செப்டம்பர் 2015 பிரேரணை மூலம் விதந்துரைத்தனர்.
இதனை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் தற்போது வெளி நாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது எனத் தெளிவாக அறிவித்துவிட்டது. கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீள உள்ளகப் பொறிமுறையை மட்டுமே முன்வைக்கின்றது.
இந்த சூழலில் இப்பேரணி சர்வ்தேச விசாரணைக்கான தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றது.
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நிலவிவரும், பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் ஆயிரக்கணக்கானதமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் சிலர் 15 – 20 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுவிசாரணை செய்யப்பட்டு வந்தனர்.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பயங்கரவாததடைச்சட்டம் நீக்கப்படும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையகத்திற்குஉறுதிமொழிகொடுத்தும் இதுவரைபயங்கரவாததடைச் சட்டம் நீக்கப்படவில்லைஎன்பதுடன் தொடர்ந்தும் பல இளைஞர்கள் அச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாழும் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்பதுடன் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனவும் இப்பேரணிவலியுறுத்துகின்றது.
போர் நிகழ்ந்த காலகட்டத்திலும், அரசியல் காரணங்களுக்காகவும் கடத்தப்பட்டும், சரணடைந்த பின்பும் காணாமல் போகச்செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் எங்கு இருக்கின்றார்கள் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என உடனடியாகக் கண்டறிந்து பகிரங்கப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு நீதிவழங்கப்படவும் வேண்டும்.
யுத்தம் நடந்தகால கட்டங்களில் கடற்படையினரின் தடை உத்தரவு காரணமாக வடக்கு–கிழக்குமீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருந்தனர்.
ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகியநிலையில் இன்றும் கூட வடக்கு–கிழக்குமீனவர்கள் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
தென்னிலங்கைமீனவர்கள் வடகிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமின்றி வடகிழக்கு மீனவர்களின் படகுகளை சட்டவிரோதமாக கைப்பற்றுவதாலும் நிரந்தர தங்குமிடங்களைஅத்துமீறி அமைப்பதனாலும் தமிழ் மீனவர்கள் தமது சொந்தமீன்பிடி இடங்களில் இருந்தே விரட்டப்படுகின்ற சூழல் உருவாகிவருகின்றது.

தென்னிலங்கை மீனவர்கள்,வடகிழக்கு கடற் பிரதேசங்களில் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை கையாள்வதால் தமிழ் மீனவர்கள் தமதுவாழ் வாதரங்களை இழந்தும் வருகின்றார்கள்.
இதன் காரணமாக ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.
இந்தியமீனவர்களின் சட்டவிரோதமீன்பிடிமுறைகளாலும் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அன்றாடத் தொழில் செய்துபிழைக்கும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டு மென்பதுடன், தமிழ் மீனவர்களின் கடல் வளங்கள், அத்துமீறி,சட்டத்துக்கு புறம்பாகசூறையாடப்படுவதை இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
விடுதலைக்காக போராடிய தேசிய இனங்கள் மத்தியில் அவர்களின் விடுதலை வேட்கையை அழிக்கும் பொருட்டு போதை வஸ்துக்களை இளைஞர்கள்,யுவதிகள் மத்தியில் பரப்பும் வழிமுறைகளை பல நாடுகளின் அரசுகள் கையாண்டுள்ளன.
தமிழர் தாயகத்தை ஆழமான இராணுவ கண்காணிப்புக்குள் வைத்திருக்கின்ற போதிலும் பெருமளவான போதைவஸ்துப் பொருட்கள் எமது பிரதேசங்களினுள் ஊடுருவவிடப்படுகின்றன.
கிரோயின் போன்றபோதைப் பொருட்களும்,வடகிழக்கில் வேகமாகப் பரவிவருவதுடன், வட- கிழக்கில் இராணுவத்தினால் நடாத்தப்படும் விளையாட்டுவிழாக்களின் போதுதமிழ் இளைஞர்களிடையே மது பாவனையை இராணுவம் நேரடியாகஊக்கப்படுத்துவதுஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்; இவை அனைத்தும் எமது இளம் சந்ததியின் எதிர்காலத்தைதிட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகளாகவே நோக்க வேண்டியுள்ளது.
இவற்றை நிறுத்தவும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.
அரசியல் தீர்வுசம்பந்தமாக, இன்னமும் தீர்வுகாணப்படாத தமிழ் தேசிய இனப் பிரச்சனையினதும், நடந்து முடிந்த போரினதும் - நேரடி மற்றும் நேரடியற்ற விளைவுகளான மேற் கூறப்பட்ட அரசியற் பாதகங்கள் எதுவும் மீண்டும் நிகழாதவாறு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியற் தீர்வுமுன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த பேரணிபிர கடனம் செய்கின்றது.


தமிழர்களின் தேசியபிரச்சனைக்குதீர்வுகாணப்படும் எனும் நோக்கில் 3ஆவது குடியரசு அரசியல் யாப்பைகொண்டு வருவோம் என்று இவ் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கூறிவருகின்றது.
ஆனால் இலங்கை அரசின் ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வுவரும் எனவும் பௌத்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையில் மாற்றம் வராது எனவும் தொடர்ந்தேர்ச்சியாக கூறிவருகின்றனர்.
ஒற்றை ஆட்சிக்குள் ஒரு குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கான தீர்வாகதிணிக்க இவ்வரசாங்கம் முயற்சிக்கின்றது.
அவசரஅவசரமாக ஓர் அரசியலமைப்பை பாராளுமன்றில் நிறைவேற்றி பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற அரசாங்கம் முயற்சிக்கப் இருக்கின்றது.
தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் வாக்கு புதிய அரசியலமைப்பிற்கு கிடைத்தால் அதை வைத்து தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வொன்றைவழங்கிவிட்டதாக அர்த்தப்படுத்துவதே
அரசாங்கத்தின் நோக்கம்.
புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
தமிழர்கள் புதிய அரசியலமைப்பு எப்படியாக இருக்கவேண்டும் எனக் கருத்துக் கூறுவதோ, கூட்டாகநிலைப்பாடு எடுப்பதோ, அது தொடர்பில் ஜனநாயக ரீதியாக அணி திரள்வதோ அரசியலமைப்பாக்க முயற்சியை குழப்ப எடுக்கும் நடவடிக்கையாக சித்தரிப்பதை கண்டிக்கின்றோம்.
தற்போதைய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் எமக்குதந்தபடிப்பினையின் அடிப்படையிலும், இலங்கை அரசியலின் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் கலாசாரத்தில் தமிழர்களின் கடந்த 68 ஆண்டுகால கூட்டனுபவத்தின் பிரகாரமும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டதீர்வுத்திட்டத்தின் அடிப்படையில், தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறை சாத்தியமானதீர்வு, தமிழர்களை இலங்கைத் தீவின் வடக்குகிழக்கில் ஒருதேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்படும் எனக் கூறுகின்றோம்.
தமிழர்களின் சுயநிர்ணயஉரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவனரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகின்றோம்.
தமிழர் தேசத்தின் தனித்து வத்தையோ,தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரைகுறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ளமுடியாது.
புதிய அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்படுகின்றது. புதியஅரசியலமைப்பு தொடர்பிலாக நடாத்தப்பட்ட பொதுமக்கள் கலந்தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன்வைப்புக்களை புறம் தள்ளியே சமரப்பிக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும், சனநாயகரீதியதுமான கலந்துரையாடல் ஒன்றுமக்கள் மத்தியில் இடம் பெறபோதுமான காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.
அடக்கு முறையின் கீழ் அரசியல் தீர்வுதொடர்பிலான கலந்துரையாடலை நடாத்தமுடியாது.
வடக்குகிழக்கில் கருத்துக் சுதந்திரத்துடன் புதியஅரசியலமைப்பு தொடர்பிலானதிறந்த விவாதம் நடைபெற பயங்கரவாதத் தடை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், இராணுவமயமாக்கல் நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளத